For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அம்பத்தூர் | பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!

09:50 AM Jun 18, 2024 IST | Web Editor
அம்பத்தூர்   பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்
Advertisement

அம்பத்தூரில் பீடி தர மறுத்த தந்தையை,  தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.   இதனையடுத்து  சந்தேகமடைந்த போலீசார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில்,  அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும்,  அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில்,  ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதும்,  இதில் படுகாயமடைந்த மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது.  இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார்,  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement