நான் துரோகியா? நேரலையில் கதறி அழுத்த மல்லை சத்யா!
'தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று மல்லை சத்யா நேரலையில் கண்ணீர் விட்டு கதறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:58 PM Jul 14, 2025 IST | Web Editor
Advertisement
Advertisement
ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ துரோகி என்று கூறிய நிலையில், இது குறித்த கேள்விக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மல்லை சத்யா நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதனை தொடர்ந்து, வைகோவுக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தின் மூதுரை அரசியல் பிழைத்தோற்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும், நான் இறந்து போயிருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார்.
நான் துரோகியா? தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மல்லை சத்யா தொலைக்காட்சி நேரலையில் கண்ணீர் விட்டு கதறிய நிகழ்வு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.