“என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான்” - எடப்பாடி பழனிசாமி உருக்கமான உரை!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாராட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார். விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மாட்டு வண்டியில் சீர்வரிசையாக கொண்டுவந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“மூன்று மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டிருக்கிற காட்சியை பார்க்க முடிகிறது. நான் ஒரு விவசாயி என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான். இந்த நிகழ்ச்சிதான் என் உள்ளத்தின் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. நான் பிறந்த பிறவி பயனை அடைந்து விட்டேன். ஒரு விவிசாயி என்பதில் தொடங்கி முதலமைச்சராவேன் என கனவிலும் கூட நினைக்கவில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டத்தை பற்றி பேசினேன். அவர்கள் என்னை அழைத்து ஆலோசனை நடத்தியபோதே, ஆஹா திட்டம் நிறைவேறி விடும் என நினைத்தேன். ஆனால் துரிதிஸ்டவசமாக அவர் மறைந்தார். உங்களின் அதிர்ஷ்டத்தால் நான் முதலமைச்சராக வந்துவிட்டேன்.
உத்தரவு போடும் இடத்துக்கு நான் வந்து விட்டதால் இத்திட்டம் எளிதாகி விட்டது. போராடிய விவசாயிகள் கனவை நனவாக்கிய அரசு அதிமுக அரசு. நான் எப்போதுமே இருக்கிறது சூழலுக்கு தக்கவாறு நடந்து கொள்கின்றவன். என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. சிலபேர் திட்டத்தை கொண்டுவராமல் எந்த முயற்சியும் செய்யாமல், திறந்து வைத்தவர்களும் சிலர் இங்கே இருக்கிறார்கள் உழைத்தவர் விவசாயி, ஆனால் அனுபவிப்பவர் வேறு ஒருவர்.
இத்திட்டத்திற்காக சிறந்த ஒப்பந்ததாரரை தேர்வு செய்தோம். அதிமுக அரசின் ஆட்சியிலேயே 85 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டது. 15 சதவீதம் பணிகள் நிலத்தை கையகபடுத்தி, ஓராண்டில திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டு விட்டடார்கள். மக்களை பற்றி சிந்திகவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி. அவர்களும் கொண்டு வர மாட்டார்கள். ஏற்கனவே இருந்த அரசு கொண்டு வந்ததையும் செயல்படுத்த மாட்டார்கள். இதுவரைக்கும் தமிழகத்தில் இது போன்ற திட்டம் வந்ததே இல்லை.
ஒரே இடத்தில் கன்ரோல் ரூம். நான் ஒரு விவசாயி என்ற காரணத்தால், நான் இருக்கும்போதே எப்படியெல்லாம் செய்யலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை கொண்டு வந்தேன். குடிமரத்து பணிகளால் விளைச்சல் அதிகமானது. நமக்கு 1.5 டி.எம்சி தண்ணீர் தேவை. இதில் பிரச்சனைகள் வந்துவிட்டால் என்ன செய்வது என ஆலோசனை நடத்தினேன். அதனால் பவானி ஆற்றில் ஆறு தடுப்பணைகள் கட்ட உத்தரவிட்டேன். அதிமுக ஆட்சியில் கொண்டு வரபட்ட தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அத்திகடவு- அவிநாசி இரண்டு திட்டம் தொடங்குவதற்கு பூர்வாங்க பணி நடைபெற்றது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அந்த திட்டமும் நிறைவேற்றப்படும். விடுபட்ட குளங்களை இத்திட்டத்தில் இணைப்பது தொடர்பாக அதிமுக அரசு வரும்போது ஆராய்ந்து அந்த குளங்கள் இணைக்கபடும். விவசாயிகள் பாதிக்கின்ற போது, அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. விவசாயிகளுக்கு எந்தெந்த விதங்களில் உதவி செய்யமுடியுமோ, அந்தந்த உதவிகளை அதிமுக அரசு செய்தது. காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்த்த ஒரே அரசு. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவித்தோம். காவிரி ஆற்றில் இரு இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டோம். அதை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளார்கள்.
இந்த ஆட்சியிலிருப்பவர்களும் அதிக தடு்ப்பணைகள் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். இன்னும் கட்டியபாடில்லை. பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால் வேலுமணி, ஜெயராமன் உள்ள மூவரை கேரளாவிற்கு அனுப்பி கோரிக்க வைத்தோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படியே கிடப்பில் போட்டார்கள். நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். நடந்தாய்வாழி திட்டம் குடியரசு தலைவர் உரையில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
காவிரி, நொய்யல், அமராவதி போன்ற ஆறுகளில் நதிநீர் மாசிபடுவதை தடுத்து சுத்தம் செய்வதற்காக திட்டம். நடந்தாய் வாழி திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் இன்று குடிக்கின்ற நீர் சுத்தமான நீராக இருந்திருக்கும். நீர் மேலாண்மைக்கு இந்த அரசாங்கம் முன்னுரிமை தருவதில்லை. விவசாயிகளின் விரோத முதலமைச்சராக இருக்கிறார் இன்றைய முதலமைச்சர்.
அதிமுக ஆட்சிக்கு பிறகு அதிமுக கொண்டு வந்த திட்டங்களை இந்த ஆட்சி நிறைவேற்றவில்லை. சில திட்டங்களை இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தான் நிறைவேற்றினார்கள். ஸ்மார்ட் சிட்டித் திட்டம், கோவை கூட்டுகுடிநீர் திட்டம், திருப்பூரில் மருத்துவகல்லூரி கொண்டு வந்தோம். ஒரு மருத்துவ கல்லூரியை இந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ளார்களா?
திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாக கோவை ,திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வந்தார்களா? அதிமுக கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்த அரசாங்கம் இந்த அரசு. எங்கெல்லாம் நாம் கட்டிவைத்தோமோ அங்கெல்லாம் கருணாநிதி பெயரை வைத்து திறந்து வைக்கிறார்கள். யார் கட்டிய பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?” என தெரிவித்தார்.