For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DMK அரசை கண்டித்து மதுரையில் #AIADMK சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

08:55 PM Aug 20, 2024 IST | Web Editor
 dmk அரசை கண்டித்து மதுரையில்  aiadmk சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Advertisement

மதுரையில் அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடமிருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற முயற்சிக்கும் வீடியோ திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். கள்ளர் சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலை வாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற, பல அடிப்படை உரிமைகள் பறிபோகும்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

பேனா சிலை வைப்பதிலும், 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப்படுத்துவதிலும் மட்டுமே திமுக அரசு ஈடுபாடாக உள்ளது.
எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில், ஆக. 24 சனிக் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement