For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக - எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு : இன்று காலை நடைபெறும் என அறிவிப்பு!

08:19 AM Mar 20, 2024 IST | Web Editor
அதிமுக   எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு    இன்று காலை நடைபெறும் என அறிவிப்பு
Advertisement

அதிமுக - எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு  இன்று காலை 10மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் : 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அண்மையில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்து வருகின்றன.  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் - 20 ) முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு எஸ்.டி.பி. ஐ கட்சி தலைவருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை அதிமுக ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement