For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

10:06 PM Jun 26, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்   இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது!  எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,  மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம். 

எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும்,  கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (ஜுன் 27) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்! கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement