For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” - வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!

03:21 PM Mar 30, 2024 IST | Web Editor
“கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது”   வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி
Advertisement

கொடுக்கும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் திராணி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என அக் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.

Advertisement

வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இன்று (மார்ச் 30) தனது 3ம் நாள் பிரச்சாரத்தை தண்டையார்பேட்டை 40-வது வட்டத்தில் தொடங்கினார். புது வண்ணாரப்பேட்டை, ஏ.ஈ.கோயில் திடல், சிவன் நகர் மெயின் தெரு, ஜீவா நகர், சுனாமி குடியிருப்பு, அம்மினி அம்மன் தோட்டம், திருவள்ளூர் குடியிருப்பு வழியாக செல்லியம்மன் குடிசை பகுதி, வஉசி நகர் 30வது குறுக்கு தெரு, வஉசி நகர் மார்க்கெட் தெரு, எம்ஜிஆர் மன்றம், சேணியம்மன் கோயில் தெரு மற்றும் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். 

வேட்பாளர் ராயபுரம் மனோவுடன்  எஸ்டிபிஐ, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளை ஏந்தியவாறு மேள தாளங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு,  குடியிருப்புவாசிகள் பலர் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.  ஒரு சிலர் தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்தனர். பிரச்சாரத்தின் போது, “பால் விலை, ஆவின் ஐஸ் கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  இதை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர அதிமுகவிற்கு வாக்களியுங்கள்” என்று பேசி வேட்பாளர் ராயபுரம் மனோ வாக்கு சேகரித்தார்.

பரப்புரையின் இடையே அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக நாம் செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்டமாக வரவேற்பை கொடுக்கிறார்கள். மத்திய சென்னை, தென் சென்னை இதற்கு இணையாக வடசென்னை நாடாளுமன்ற தொகுதியிலும் ரயில்வே நிலையம், மிகப்பெரிய நூலகம், எய்ம்ஸ் மருத்துவமனை, கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவோம்.

ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கனவே திமுகவினரால் அளிக்கப்பட்டிருந்தாலும்,  அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் உள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றால் வாக்குறுதிகள் அனைத்தையும் ஐந்தாண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவோம். அதற்கான திராணி எங்களுக்கு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி அனைத்திற்கும் தீர்வு காண முயற்சி எடுப்போம்”

இவ்வாறு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ கூறினார். 

Tags :
Advertisement