Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆக. 9ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

08:45 PM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதுதொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

இந்த கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AIADMKChennaiDistrict Secretariesedappadi palaniswamiEPS
Advertisement
Next Article