For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

09:18 PM Jul 15, 2024 IST | Web Editor
போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது
Advertisement

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். இதனையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகைகள் சார்மி, முமைத்கான், ரகுல் பிரீத் சிங் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது.  இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் பணப்பறிமாற்றம் இருந்ததால், வங்கி அறிக்கைகளை வழங்குமாறு அமலாக்கத்துறை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டிருந்தது.


இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் போலீஸாரின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு போதைப்பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக  5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவற்றை எடுத்து கொண்ட 13 பேரின் பட்டியலில் தான் அமானின் பெயர் வந்தது என்றும் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Advertisement