Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் - டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடல்!

12:12 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகம் செல்லும் மெட்ரோ நிலையம் மூடப்படுப்பட்டுள்ளது.

Advertisement

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், “நான் உள்பட மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர். தற்போது எனது உதவியாளரையும் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா, அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும், முடிந்தால் அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள் என  சவால் விடுத்துள்ளார். இதனால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியுள்ளது. இந்நிலையில் பாஜக அலுவலகம் செல்லும் ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மூடப்படுப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வறும் வரை இதனையே பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

டிடியு மார்க், ஐபி மார்க், மிண்டோ சாலை மற்றும் விகாஸ் மார்க் போன்ற சாலைகளை தவிர்த்து அதற்கேற்றவாறு பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Tags :
Aam Aadmi PartyArwind KejriwalBJPDelhiDMRCITO Metro StationNarendra modi
Advertisement
Next Article