For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி!

01:52 PM Dec 13, 2023 IST | Web Editor
சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி
Advertisement

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார்.  

Advertisement

சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது குழந்தை ஜனுஷிகா(8). இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்த நிலையில், தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில்  பள்ளிக்கு இன்று சென்று கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்!

சிலுவைபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து டாரஸ் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.  இதில் நிலை தடுமாறி கிழுந்த சிறுமியின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் தந்தையின் கண் முன்னே சிறுமி பலியானார்.

ஜம்புலிங்கம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement