For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் - வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.
01:46 PM Aug 12, 2025 IST | Web Editor
ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.
நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல்   வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்
Advertisement

Advertisement

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கஜானா தங்க ஆபரணக் கடை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, துப்பாக்கிகளுடன் புகுந்த ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை கடை திறக்கப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே, கொள்ளையர்கள் திடீரென கடைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளையர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரு ஊழியர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஊழியர்களின் எதிர்ப்பால் கொள்ளையர்களால் எந்தப் பொருளையும் திருட முடியவில்லை. கஜானா தங்க ஆபரணக் கடையின் பாதுகாப்பு மிகவும் பலமாக இருந்ததாலும், ஊழியர்களின் துணிச்சல் காரணமாகவும், கொள்ளையர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து, வெறுங்கையுடன் தப்பி ஓடினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

Tags :
Advertisement