For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

08:40 AM Aug 16, 2024 IST | Web Editor
திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
Advertisement

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர். இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்தததை அடுத்து உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.

சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரின் வீட்டின் முன்பாக நிருத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு  தப்பி ஓடினர். பின்னர் அந்த கும்பல் அருகில் இருந்த பார்க்கிங் யார்டில் வெடிகுண்டு வீசியதுடன், ஓட்டுநர் சிவா என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இந்நிலையில், மாமுல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?  என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement