For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

10:33 AM Jun 15, 2024 IST | Web Editor
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு
Advertisement

டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்,  ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’  பேசியதாக,  அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய்,  முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் கடந்த 2010, அக். 21-இல் ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய்,  காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.  இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சுஷில் பண்டிட்,  டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா்.  இதையடுத்து, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய 2010,  நவ.27-இல் உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த மனுவை ரத்து செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  அருந்ததி ராய்,  ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட்டித்தின்கீழ் விசாரிக்க துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக,  இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்களுக்கு எதிராக விசாரணையை நடத்த துணைநிலை ஆளுநா் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் தெரிவித்திருந்தாா்.

Tags :
Advertisement