For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டவிரோதமாக கட்டப்பட்ட 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி

11:36 AM Jul 07, 2024 IST | Web Editor
சட்டவிரோதமாக கட்டப்பட்ட 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி
Advertisement

குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிர் இழந்துள்ளார்.

Advertisement

நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள  சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.  சுமார் 50 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் 5 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்ரனர்

சூரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில்  அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்  இந்த விபத்தில் சிக்கிய 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் 7 பேர் உயிரிழந்ந்து அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

இடிந்து விழுந்த கட்டடத்தில்  மேல்ம் சிலர் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது   அவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கட்டிட கடந்த, 2017-18ஆ ம் ஆண்டில் கட்டப்பட்டு, 6 ஆண்டுகளில் இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement