For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு!

09:51 AM May 22, 2024 IST | Web Editor
தாம்பரத்தில் ரூ 4 கோடி பறிமுதல் விவகாரம்  விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு
Advertisement

மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் 3 பேர் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில், எந்த காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி, அதனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் பாஜகவின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணை சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று (மே 22) விசாரணைக்கு வருகிறது.

Tags :
Advertisement