Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

04:47 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கடந்த 5 ஆம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி திருவேங்கடம்,  ஜூலை 14ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கடந்த 5 ஆம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி திருவேங்கடம்,  ஜூலை 14ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisement

இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :
ArmstrongBahujan Samaj PartyPERAMBUR
Advertisement
Next Article