For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது!

09:24 PM Jan 13, 2024 IST | Web Editor
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது
Advertisement

புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகு ஒன்றை சேதப்படுத்தியதோடு அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே மீண்டும் நடுக்கடலில் எல்லைத்தாண்டி  மீன் பிடித்ததாக நாகை மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களையும், அவர்களின் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்கடையினர் கைப்பற்ற முயன்றுள்ளனர். அப்போது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி நாகை மீனவர்களின் ஒரு விசைப்படகு கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அந்த இரண்டு படகையும் அதிலிருந்த மீனவர்களையும் இலங்கை  கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர், மூழ்கிய படகை கட்டி இழுந்து கொண்டு மீனவர்கள் நாகைக்கு புறப்பட்டுள்ளனர். இரவுக்குள் படகு நாகையை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement