For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

12:22 PM Jul 26, 2024 IST | Web Editor
சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்
Advertisement

சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து 24 வயது இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னையின் கிண்டி அருகேயுள்ள கத்திப்பாரா பாலத்திற்கு இன்று காலை 10 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு,  அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதியில் பயணம் செய்த
மக்கள் உடனே காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் இளைஞரை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் உயிரிழந்தவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரிய வந்துள்ளது. இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement