For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்லாமிய மக்களுடன் யோகி! இது உத்தரப்பிரதேச முதல்வரின் தேர்தல் நாடகமா? உண்மை என்ன?

03:47 PM May 23, 2024 IST | Web Editor
இஸ்லாமிய மக்களுடன் யோகி  இது உத்தரப்பிரதேச முதல்வரின் தேர்தல் நாடகமா  உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by 'Newsmeter Malayalam'

Advertisement

இஸ்லாமிய மக்களுடன் யோகி ஆதித்யநாத் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில், அது போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.

யோகி ஆதித்யநாத்,  இஸ்லாமியர்கள் சிலருடன் நின்று,  அவர்களில் ஒருவரை கட்டிப்பிடித்து சிரித்துக்கொண்டிருக்கும் படம் பகிரப்படுவதோடு,  இது உத்தரபிரதேச முதல்வரின் தேர்தல் நாடகம் என்ற வர்ணனையுடன் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

புகைப்படத்துடன் பரப்பப்படும் தகவல்:

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,  இஸ்லாமிய குழுவினருடன் அன்பைக் காட்டுவது போல் நடிக்கும் அரசியல் நாடகம்.

உண்மை:

படம் உண்மையானது அல்ல. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் ஒன்று பரவி வருகிறது.  உத்தரபிரதேச முதல்வரும்,  பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர் குழுவினருடன் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒ ரு முதியவர் புன்னகையுடன் அவரை கட்டிப்பிடிப்பதை படம் காட்டுகிறது. (இணைப்பு)

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது அரசியல் நாடகம் என பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர். (இணைப்பு 1, இணைப்பு 2)

உண்மைச் சரிபார்ப்பு:
நியூஸ்மீட்டர் விசாரணையில்,  அந்தப் படம் போலியானது மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
யோகி ஆதித்யநாத்தின் சமூக ஊடகங்களிலோ அல்லது பிற ஊடக அறிக்கைகளிலோ இந்தப் படமோ அல்லது அது குறித்த தகவலோ காணப்படவில்லை என்பதுதான் அந்தப் படம் போலியானது என்பதற்கான முதல் அறிகுறி.  பின்னர் படத்தைக் கூர்ந்து கவனித்தால், அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சில குறிப்புகள் தெரியவந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களில் மனித உருவங்களில் உள்ள விரல்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடுகள் பொதுவான பிரச்சனையாகும்.  இந்தப் பிரச்சனைகளை படத்தில் பல இடங்களில் காணலாம்.  ஒருவரின் ஆடைகளுக்கு இரண்டு நிறங்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அடையாளம் காண தற்போது கிடைக்கக்கூடிய சில கணினிகளில் நடத்தப்பட்ட சோதனை,  இது AI உதவியுடன் உருவாக்கப்பட்ட படம் என்பதையும் சுட்டிக்காட்டியது.

பின்னர் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாட்டர்மார்க் குறித்து சரிபார்க்கப்பட்டது. இதில் இருந்த SAHIXD என்ற பெயரைப் பயன்படுத்தி தேடியதில், அதே பெயரில் சரிபார்க்கப்பட்ட Instagram உட்பட சமூக ஊடக கணக்குகள் கண்டறியப்பட்டன.

ஜெனரேட்டிவ் AI ஆர்வலர் என்ற அறிமுகத்துடன் பகிரப்பட்ட சுயவிவரம் ஜாஹித் எஸ்கே என பெயரிடப்பட்டுள்ளது.  கணக்கைச் சரிபார்த்த பிறகு,  புழக்கத்தில் இருந்த படம் மே 13, 2024 அன்று பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் படம் மற்ற 7 படங்களுடன் பகிரப்பட்டது.  இந்த  படங்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  பாஜக தலைவர் ஜேபி நட்டா காங்கிரஸ் கொடியுடன் நிற்பது,  ராகுல் காந்தி,  அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் பாஜக மேடையில் பேசுவது போன்ற அனைத்தும் இவ்வாறு படமாக்கப்பட்டுள்ளது.  மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் படத்தையும் பார்க்கலாம்.

தொடர் தேடலில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல படங்கள் அவரது பக்கத்தில் பகிரப்பட்டதும் கண்டறியப்பட்டது.

சமூக ஊடகங்களின்படி,  அவர் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான Megalodon இன் இணை நிறுவனர் ஆவார்.  இதன் மூலம், வெளியான படம் உண்மையல்ல என்பது தெரியவந்தது.

முடிவுரை:
நியூஸ்மீட்டர் விசாரணையில்,  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர்கள் மத்தியில் நிற்கும் படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

Note : This story was originally published by ‘Newsmeter Malayalam’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement