For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

10:20 AM Dec 22, 2023 IST | Web Editor
அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
Advertisement

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : மழை, வெள்ளம் எதிரொலி - தூத்துக்குடியில் 5வது நாளாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு  ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான மழை இருக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement