Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் சுய உதவிக் குழு | கடனை திருப்பி கேட்ட பெண்ணை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த இளைஞர்!

11:24 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் சுய உதவிக் குழு மூலம் வாங்கிய கடனை கட்டுமாறு கேட்ட பெண்ணை இரும்பு ராடால் இளைஞர் தாக்கிய நிலையில்,  சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

Advertisement

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர் காயத்ரி (29).  இவருக்கு திருமணமாகி 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், இவர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24)என்பவருக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ. 80,000 லோன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,  அவர் அந்த பணத்தை கடந்த இரண்டு மாதமாக கட்டாமல் இருந்து வந்துள்ளார்.  இதனால் காயத்ரி கடந்த 24ஆம் தேதி போன் மூலம் அஜித் குமாரை அழைத்து பணத்தை கட்டுமாறு கேட்டுள்ளார்.   இதனால் கோபமடைந்த அவர், காயத்திரி நேரில் சந்தித்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.

இதனால் காயத்ரி தலை,  வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்தார்.  இதனையடுத்து  அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்ததார்.  தொடர்ந்து, காசிமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.  மேலும், போலீசார் அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestChennaiCrimeinvestigationPolice
Advertisement
Next Article