லிவிங் டுகெதர் உறவில் இருந்தபோது உயிரை மாய்த்துக்கொண்ட பெண் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
சென்னை திருவெற்றியூர் சத்துமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58).
இவருக்கு திருமணமாகி வரலட்சுமி (வயது 46) என்ற மனைவியும் நித்யா (வயது 26) என்ற மகளும் தமிழ் செல்வன் (வயது 25) என்ற மகனும் உள்ளனர். இதில் நித்யா அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
நித்தியா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்குகிறேன் எனக் கூறி தனியாக தங்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு கொடுங்கையூர் விவேகானந்தா காலனி ஆறாவது தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 28) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு
முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.
இந்நிலையில் இருவரும் கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
அதன் பிறகு கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி ஏழாவது தெருவில் வாடகை வீடு எடுத்து நித்தியா மற்றும் பாலமுருகன் இருவரும் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யாவை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் கொடுங்கையூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நித்யா பாலமுருகனை வீட்டில் இருக்க வேண்டாம் எனக்கூறி வெளியே அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பாலமுருகன் பார்த்த போது விஷம் உட்கொண்டு நித்யா மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக பாலமுருகன் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து நித்தியாவை பரிசோதனை செய்துவிட்டு நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நித்யாவின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்ட னர் விசாரணையில்
நித்யா ஒரு பையனோடு பழகி வருவது மட்டுமே தெரியும் என்றும் லிவிங் டுகெதர்
உறவில் இருப்பது தெரியாது என்றும், நித்தியாவிடம் 25 சவரன் நகைகள் இருந்தது
அதனை காணவில்லை. பாலமுருகன் எனது மகளை கொன்று விட்டு நகைகளை எடுத்திருக்கலாம் என நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
பாலமுருகண்டம் விசாரணை மேற்கொண்டபோது நித்யாவின் பெற்றோர் அடிக்கடி நித்தியாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும். கடைசியாக நித்தியாவை பார்க்க அவரது தாய் வந்தபோது கூட 4000 ரூபாய் பணத்தை நித்யாவின் பர்சிலிருந்து எடுத்ததாகவும் இதனால் நித்தியாவிற்கும் அவரது தாயாருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும். நேற்று முன்தினம் மாலை நித்யாவை நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் நித்தியா போனை எடுக்காததால் வீட்டிற்கு தான் வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அம்பத்தூரில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது நித்யாவிற்கு வீட்டில் வைத்து தாலி கட்டியதாகவும் ஆனால் அதன் பிறகு நித்தியா அதனை கழட்டி விட்ட தாகவும் தெரிவித்துள்ளார்.
நித்தியா உடலில் செய்யபட்ட முதற்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரி ழந்த நித்தியாவின் உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்பதும் ஏதோ ஒரு பாய்சன் சாப்பிட்டு அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நித்யாவின் உயிரிழப்பிற்கு எது போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவ ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நித்யவின் செல்போனை ஆய்வு செய்தபோது நித்தியா கடைசி யாக
ஒருவரிடம் பேசியது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .அந்த நபரை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன . போலீசார் வரவழைத்த நபர் ஒரு மருத்துவர் என்பதும் நித்தியா இவரை மிரட்டி ஐந்து லட்சம் ரூபாய் வரை நித்தியா வாங்கியதும் தெரிய வந்தது .
நித்தியா ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி தனது பெற்றோர்களையும் உடன் பழகுபவர்களையும் ஏமாற்றி உள்ளார். உண்மையில் நித்தியா பல பேரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்துள்ளதும். இந்த வலையில் மருத்துவரும் விழுந்து சுமார் 5 லட்சம் வரை அவர் செலவு செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழியில் சிக்கியவர் தான் கடைசியாக பால முருகன் என்பதும் அவரும் ஐந்து சவரன் நகை மற்றும் பணத்தினை இழந்திருப்ப தும் தெரியவந்தது.
மேலும் நித்தியா தன்ன டன் பழகுபவர்களை பார்ட்டி , பப் என அழைத்துச் சென்று
மது போதையில் இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். உயிர் இழப்பதற்கு முன்பு நித்யா கடைசியாக டாக்டருக்கு போன் செய்து நான்
உன்னுடன் வாழ வேண்டும் என பேசி உள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நித்யாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் டாக்டர் பணத்தைக் கொடுத்து விட்டு அவரிடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார். இது நித்தியாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சம்பவத்தன்று மது போதையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நித்தியா தற்கொலை செய்து
கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் நித்தியாவின் முன்னாள் லிவிங் பார்ட்னர் சந்தோஷ் குமார் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.