Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? - ராமதாஸ் உடனான சந்திப்புக்குப் பின் செல்வப்பெருந்தகை பேட்டி

திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
03:31 PM Jun 27, 2025 IST | Web Editor
திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
Advertisement

பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 27) சந்தித்து பேசினார். திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது,

Advertisement

"பாமக நிறுவனர் ராமதாஸை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். அரசியல் தொடர்பாகவும், கூட்டணி குறித்த சந்திப்பும் இல்லை. திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அன்புமணி ராமதாஸ் புரிதல் இல்லாமல் திமுக பற்றி பேசி வருகிறார். பாஜகவை சமாதானப்படுத்தவே அன்புமணி பேசி வருகிறார். பாமகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.

பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜக தான் காரணம். அக்கட்சியை சுவாக பண்ண பாஜக முயல்கிறது. அடுத்து அண்ணாவை குறித்து பேசி அதிமுக கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் இந்த செயலை அதிமுக சார்பில் ஏன் கண்டிக்கவில்லை. அதிமுகவிற்கு என்ன தேவை இருக்கிறது. ராமதாஸ் யார் பக்கமும் சாயமாட்டார். இந்திய அரசியலை கரைத்து குடித்தவர். தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அதை அவர் செய்வார்"

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressDMKMK StalinPMKRamadossselvaperunthagaiTailapuram
Advertisement
Next Article