For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்!

08:56 PM May 03, 2024 IST | Web Editor
“ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை ”   மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்
Advertisement

சந்தேஷ்காலி விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் பேசவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு,  மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர்மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார். ராஜ்பவன் வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளார். நிரந்தர வேலை கொடுப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை மானபங்கம் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பர்தாமானில் இன்று (மே. 3) நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,

“பிரதமர் மோடி சந்தேஷ்காலி குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார். நான் அங்கு எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவிடவில்லை. நிலத்தை சுற்றி பிரச்னை இருந்தது. நாங்கள் அதிகாரிகளை கிராமத்திற்கு அனுப்பி தீர்த்தோம். ஆனால் ராஜ்பவனில் பணிபுரியும் ஒரு இளம்பெண் வெளியே வந்து ஆளுநரின் துன்புறுத்தலுக்கு எதிராக பேசினார். நேற்று கூட ஆளுநர், ஏன் என் அமைச்சர் அவரை எதிர்த்து பேசினார் என்று கேட்டார்.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவற்றைக் கொண்டு வரவில்லை. நேற்று அந்தப் பெண்ணின் கண்ணீர் என் இதயத்தை உடைத்தது. ராஜ்பவனில் வேலை பார்க்க பயமாக இருக்கிறது என்று அழுது விட்டுச் சென்றபோது உங்கள் ஆட்களும் அங்கே இருந்தார்கள். சந்தேஷ்காலி பற்றி ஆளுநர் பேசினார். ஆனால், தன்னிடம் பணிபுரியும் ஒருவரிடம் ஏன் இப்படிச் செய்தார்? பிரதமர் ஏன் இதுகுறித்து எதுவும் பேசவில்லை? இவர்கள்தான் நம் தாய்மார்களின், சகோதரிகளின் மானத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் " என்று குற்றம் சாட்டினார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்கு.ப் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement