“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” - சீமான் பரப்புரை!
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கெளசிக் ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்பு ஆற்றினார்.
அவர் பேசியதாவது,
“பல திருத்தம் இந்த நாட்டில் செய்ய வேண்டியுள்ளது. சீமானும் உங்கள் வேட்பாளர் கௌசிக்கும் உங்களிடம் இருந்து வந்தவர்கள். பயம் என்பது வீரனுக்கு எதிரி, நாங்கள் வீரர்கள். ஆயிரம் ரூபாய் யார் கேட்டது. அது மக்கள் பணம். அது சாதனை அல்ல. ஆயிரம் ரூபாய் நீங்கள் வைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக தூய்மையான குடிநீர் கொடுங்கள். பாஜக பெரிய கட்சியாம். அதனால் சீமானின் சினைத்தை முடக்கி உள்ளது.