For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முதலமைச்சர் எப்போது முருகரானார்?" - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!

முருகன் வரலாறு என்ற பெயரில் முதலமைச்சர் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
12:28 PM Aug 12, 2025 IST | Web Editor
முருகன் வரலாறு என்ற பெயரில் முதலமைச்சர் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
 முதலமைச்சர் எப்போது முருகரானார்     பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
Advertisement

Advertisement

பழனி முருகன் கோவிலில் பக்தர்களிடம், "முருகன் மாநாட்டு மலர்" என்ற பெயரில் கட்டாயமாக விற்கப்படும் ரூ.2,700 மதிப்புள்ள ஒரு மலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மலரில் முருகப்பெருமானின் வரலாறு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் புகைப்படங்களும், அவர்களின் கருத்துகளும் அதிகம் இடம்பெற்றுள்ளதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், "பழனி முருகன் கோயிலில், முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும்போது, 'மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?' என்ற வினா எழுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

அத்துடன், "திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில், 'ஆண்டவர்'களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது" என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை, அரசியல் ஆதாயத்திற்காகப் பக்தர்களின் நம்பிக்கையைச் சுரண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானின் வரலாற்றை அறிந்துகொள்ள ஆர்வத்துடன் இந்த மலரை வாங்குவதாகக் கூறுகின்றனர். ஆனால், அதில் பெரும்பாலான பக்கங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும், அவர்களின் சாதனைகளும் இடம்பெற்றிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மலரின் விலை ரூ.2,700 என்பதால், ஏழை எளிய பக்தர்கள் இந்த கட்டாய விற்பனையால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் எனவும், பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம், மத நம்பிக்கைகளில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement