For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
01:08 PM Jun 17, 2025 IST | Web Editor
கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல   சில உள்ளங்களை    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியது. இதனையடுத்து, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை (ஜுன் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement