For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் என்ன தான் நடக்கிறது?” உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!

03:46 PM Oct 17, 2024 IST | Web Editor
“நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் என்ன தான் நடக்கிறது ” உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
Advertisement

நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் என்னதான் நடக்கிறது? என பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடிந்துகொண்டார்.

Advertisement

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு
செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதை நம்பி ஏராளமானோர் பல ஆயிம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் இந்நிறுவனத்தினர் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரையை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற நிர்வாகிகள் சார்லஸ் மற்றும் இளையராஜா ஆகியோருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரி ஜெயின்குமார் உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் வேலு என்பவர் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுகள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது இந்த வழக்கில் எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்? வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அரசு தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அவற்றை வழக்கில் அட்டாச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது; இதனால் கால அவகாசம் மேலும் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதி இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? என கேள்வி எழுப்பியதோடு, சொத்துக்களை வழக்கில் இணைத்து
அரசாணை வெளியிடுவதற்கு காலம் தாமதிக்க காரணம் என்ன? இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. அக்டோபர் 19-ம் தேதிக்குள் நியோ மேக்ஸ் சொத்துக்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு
விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags :
Advertisement