For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

07:12 AM Jan 07, 2024 IST | Web Editor
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும் ”
Advertisement

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும் என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நேற்று (டிச. 06) நடைபெற்றது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மு. பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவ் ராஜ்குமார், பார்த்திபன், வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகள் கௌதமி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், ப.ரஞ்சித், மோகன் ராஜா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி
நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

Tags :
Advertisement