"திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம்" - வைகோ பேட்டி!
ஈரோட்டில் மதிமுக 31வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக கூட்டணியில் மதிமுக வலுவாக உள்ளது. தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இடம்பெற 8 எம்எல்ஏகள் தேவை. எனவே கூடுதல் தொகுதிகள் கேட்டு பெறுவோம் என்றார்.
தமிழகத்தில் போதை பொருட்கள் நீண்ட நாட்களாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என கூறிய அவர், விசிக திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளது. ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பபடுவதாக தெரிவித்தார். திமுக பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைுவேற்றியுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கவில்லை என்றும், ஆளுநர் ஆர்.என் ரவி ராஜ்பவனை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழகம் மேன்மையடையும் என கூறினார்.
நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு சம்மந்தமில்லாமலும் பொறுப்பில்லாமலும் பேசி வருகிறார். முருக பக்தர் மாநாடு ஒரு கட்சி சார்பில் நடத்தப்படுவது கண்டனத்திற்குறியது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மதிமுக வின் நிலைபாடு என்று தெரிவித்துள்ளார்.