"நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம், 86 லட்சம் ரூபாயில் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளை தாயுடன் ஒன்றிணைத்து தீவிர பராமரிப்பு அளித்து விரைவில் குணமடைய வைக்கும் பிரிவு, 16 லட்சம் ரூபாயில் துணை இனப்பெருக்க மையம் முதல் நிலை, 60 லட்சம் ரூபாயில் வளர்ச்சி குறைபாடான குழந்தைகளுக்கு குரோத்ஹார்மோன், 50 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வளர்ச்சி குறைபாடு குழந்தைகளுக்கு வாரந்தோறும் ஊசி போடுவதற்கான குரோத்ஹார்மோன்களை வழங்கினார்.
இதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக அபரிவிதமாக வளர்ந்திருக்கிறது. 414 கோடி ரூபாயில் செலவில் கட்டிடங்கள் கட்டபட்டடு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நீராவி சலவை வசதி கட்டும்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
மழைநீர் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளுக்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பபட்டு அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 100 சதவீதம் மருத்துவசேவையை உறுதிபடுத்துவது என்ற நோக்கத்தில் இந்த மருத்துவமனையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில 16.30 லட்சம் செலவில் முதல்நிலை செயற்கை கருத்தரித்தல் மையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கருத்தரித்தல் மையத்தில் இதுவரை 180 தாய்மார்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் இருவர் கருவுறும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஐந்து வாரங்களுக்கான சொமாட்டோ கிராம் மருந்து வழங்கும் திட்டம் கோவையில் இன்று துவங்கப்பட்டுள்ளது.
13.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் சொமாட்டோகிராம் வழங்கும் திட்டம் இன்று கோவையிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. இ.சி.ஆர்.சி என்ற அமைப்பும் இன்று துவக்கி வைப்பட்டுள்ளது. அதேபோல்,15 படுக்கைகளுடன் இந்த அமைப்பு கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு திட்டங்களுடன் சேர்ந்து மருத்துவமனையில் இந்திய அளவில் சிறந்த மருத்துவ சேவைகள் பெற்ற நிர்வாகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. நீட் தேர்வை விலக்கு பெற வேண்டுமென நானும், மமுதலமைச்சரும் தொடர்ந்துசட்டபோராட்டம் செய்து கொண்டிருந்தாலும், நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 76 ஆயிரத்து 181 மாணவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். இருக்கும் இடங்களில் இவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இந்திய அளவில் முதல் 100 மதிப்பெண்களில் ஆறு பேர் நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் கவுன்சிலிங் துவங்கி வைப்பட உள்ளது.
இன்று சிறுவாணி பகுதியில் உள்ள 15, 16 கிலோ மீட்டர் மலை கிராமங்களுக்கு நடந்து சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கேட்டறிந்தேன். சீங்கம்பதி என்ற மலை கிராமத்தில் 12 பேர் அரசின் மருத்துவ வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். மலை கிராமங்களில் கூட கடைகோடி மருத்துவ சேவை என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.