For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Wayanad நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் - #Kerala Chief Minister அறிவிப்பு!

02:50 PM Aug 14, 2024 IST | Web Editor
 wayanad நிலச்சரிவு  உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ  6 லட்சம் நிவாரணம்    kerala chief minister அறிவிப்பு
Advertisement

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரணத் தொகைகளை வழங்க மத்திய அரசிடன் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ.75,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

”வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000, 40 - 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வழங்கப்படும்.

இதையும் படியுங்கள் : மோசமான #HeatExposure – கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு என ஐநா கவலை!

வீடுகளை இழந்து நிவாரண முகாம் மற்றும் உறவைனர்களின் தங்கியுள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த நிவாரணங்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச தங்கும் இடங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அந்த இடங்களில் தங்க வாடகை வசூலிக்கப்படாது. கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. வாரிசு சான்றிதழ் இல்லாமல் இழப்பீட்டு தொகையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement