Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“விசிகவும் அதிக தொகுதிகளை கோரும்” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!

விசிகவும் அதிக தொகுதிகளை கோரும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேட்டியளித்துள்ளார்.
10:42 AM Jun 11, 2025 IST | Web Editor
விசிகவும் அதிக தொகுதிகளை கோரும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேட்டியளித்துள்ளார்.
Advertisement

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது அவரிடம் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும், குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்களும் அப்படித்தான் சொல்றோம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்.

எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும்
இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவங்களும் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனி மெஜாரிட்டியோட வெற்றி பெற விருப்பத்தில் இருப்பார்கள். எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம். திமுக தேர்தல் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு ஆகவே நானும் சொல்லுகிறேன். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய
வேண்டுகோள்.

நாங்கள் கூடுதலாக மதுக்கடைகளை மூட வேண்டும் படிப்படியாக மூட வேண்டும்
தேர்தலுக்கு முன்னதாக அதிலே ஒரு நிலைப்பாட்டை திமுக எடுக்க வேண்டும்
என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறோம். திமுக கூட்டணிக்கு சவாலாக அதிமுக கூட்டணி அமையுமா என்று கேட்டால் இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை.  அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டியதில்லை யதார்த்தமான உண்மை அதுதான்.

அமித் ஷா ஒரு முறைக்கு இருமுறை வந்தார் கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். பாஜக எதிர் பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. ஆகவே அதிமுக பாஜக கட்சிகளைத் தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில்
உள்ளன என்பதை இன்னும் நம்மால் முடிவுக்கு வர முடியவில்ல.  இந்த சூழலில் அதிமுக பாஜக ஆட்சியை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப். இந்த நொடி வரை திமுக கூட்டணி தான் ஒரு
கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது வலுவாக உள்ளது”

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags :
AriyalurDMKthirumavalavanVCK
Advertisement
Next Article