For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விருதுநகர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிதிஉதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
01:04 PM Jun 08, 2025 IST | Web Editor
விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிதிஉதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் தீ விபத்து   உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 4 லட்சம் நிதி உதவி   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

விருதுநகரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (07.06.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) த\பெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement