For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஞ்சி கோப்பை கடைசி லீக் ஆட்டங்கள் இன்று தொடக்கம்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கும் #ViratKohli!

ரஞ்சிக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கும் நிலையில் விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு இதில் களமிறங்குகிறார்.
08:38 AM Jan 30, 2025 IST | Web Editor
ரஞ்சி கோப்பை கடைசி லீக் ஆட்டங்கள் இன்று தொடக்கம்    12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கும்  viratkohli
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் களமிறங்குகின்றன. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, ஜார்க்கண்டை எதிர்கொள்கிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் | Tik Tok-ல் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்!

இந்த நிலையில், டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார். வதோதராவில் நடைபெறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் பரோடா-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. இதே பிரிவில் மும்பையில் அரங்கேறும் மற்றொரு முக்கிய ஆட்டத்தில் மும்பை-மேகாலயா அணிகள் களமிறங்குகின்றன.

'பி' பிரிவில் ஆமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்- இமாசலபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன. டெல்லியில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.விராட் கோலி ரஞ்சி போட்டியில் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.

அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார். விராட் கோலி களமிறங்குவது அந்த அணியின் பலத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பையில் களமிறங்குவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement