For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

04:29 PM Jun 26, 2024 IST | Web Editor
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்   இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது.  மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  திமுக சார்பில் அன்னியூர் சிவா,  பாமக சார்பில் சி.அன்புமணி,  நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்தனர்.

இதில் 2022 ஜூலை 12-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம்,  கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் கே.பி.செல்வி (40), கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம்  தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.  பின்னர், தனது குழந்தைக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி தெரிவித்தார்.

இதுபோல்,  தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் (58), வெள்ளை சேலை அணிந் வந்தும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் தி.ரமேஷ், காந்தியவாதி போன்று வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது.  அதில் அன்னியூர் சிவா (திமுக),  சி.அன்புமணி (பாமக),  அபிநயா (நாதக) உள்ளிட்ட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.  மேலும் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (ஜுன் 26) பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  யாரும் மனுவை திரும்பப் பெறாததால் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த யாரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெறவில்லை.

அதன்படி,  29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்றது.  அந்த வகையில்,  பாமகவுக்கு பாம்பழம் சின்னமும்,  நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  தொடா்ந்து,  ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.  ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags :
Advertisement