For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதிய படத்திற்காக மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம்!

09:50 PM Jul 07, 2024 IST | Web Editor
புதிய படத்திற்காக மீண்டும் இணைந்த ஆர்யா   சந்தானம்
Advertisement

சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம்  பூஜையுடன் இன்று தொடங்கியது.

Advertisement

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான பூஜை இன்று (ஜூலை 7) நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த், இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இதுகுறித்து இயக்குநர் பிரேம் ஆனந்த் கூறியதாவது;

"கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்.

மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்," என்று கூறினார்.

Tags :
Advertisement