For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவின் வரி உயர்வு - கோவை ஜவுளித்துறை பாதிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் பஞ்சாலைகள் சங்கம்!

அமெரிக்கா, இந்தியாவிற்க்கு 50 சதவீதம் வரி உயர்த்திய நிலையில் பஞ்சாலைகள் சங்கம் மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடியுள்ளது.
05:27 PM Aug 28, 2025 IST | Web Editor
அமெரிக்கா, இந்தியாவிற்க்கு 50 சதவீதம் வரி உயர்த்திய நிலையில் பஞ்சாலைகள் சங்கம் மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடியுள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு   கோவை ஜவுளித்துறை பாதிப்பு  மத்திய  மாநில அரசுகளின் உதவியை நாடும் பஞ்சாலைகள் சங்கம்
Advertisement

Advertisement

கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் (SIMA) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்களை இதில் பார்க்கலாம்.

அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களுக்கான வரியை 50% உயர்த்தியுள்ளதால், கோவையைச் சுற்றியுள்ள ஜவுளித் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த வரி உயர்வு ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

இதன் விளைவாக, இந்திய ஜவுளிப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் ஏற்படும் முழுமையான நிதி இழப்புகள் மற்றும் பாதிப்புகள் வரும் நாட்களில் தெளிவாகத் தெரியவரும் என SIMA தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான சூழலில், வெளிநாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி விலக்கு கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இது ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக உள்ளது. பருத்தி விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித் துறைக்கு, இந்த நடவடிக்கை உற்பத்திச் செலவைக் குறைக்க உதவும். இதற்காக பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு SIMA தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

அமெரிக்காவின் வரி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவை ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர். வரி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என SIMA நம்புகிறது.

தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக SIMA தெரிவித்துள்ளது. மின்கட்டணக் குறைப்பு, மானியங்கள் மற்றும் பிற சலுகைகள் போன்ற மாற்று நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு இந்திய ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருந்தாலும், அரசு ஆதரவுடன் இந்த சவாலை சமாளித்து முன்னேற முடியும் என பஞ்சாலைகள் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags :
Advertisement