For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SuperStar ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்தார் உபேந்திரா!

04:39 PM Aug 24, 2024 IST | Web Editor
 superstar ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்தார் உபேந்திரா
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, திரைப்படத்தின் நாடு முழுவதுமான வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது. முக்கியமாக, 'கூலி' திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, 'கூலி' திரைப்படத்தில் புதிதாக இணைய உள்ள அந்த நட்சத்திர நடிகர் யார் என்கிற கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா தமிழில் சத்யம் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் சன் ஆஃப் சத்தியமூர்த்தி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement