For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்” - திருமாவளவன்!

சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
04:18 PM Feb 08, 2025 IST | Web Editor
“இந்தியா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்”   திருமாவளவன்
Advertisement

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு மாநில மாநாட்டில், சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

“ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம்தான் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம். ஆர்.எஸ்.எஸ்
தலைமையிடம் என்ன செல்கிறதோ அதைதான் செயல்படுத்துவார். அவருக்கு எந்த மரபுகள் மீதும் நம்பிக்கை கிடையாது. அவருக்கு பொலிட்டிக்கல் எத்திக்ஸ் கிடையாது. அவர் நூறு விழுக்காடு ஆர்.எஸ்.எஸ் தொண்டர். ஆகவே பாஜக அல்லாது திமுக கட்சி ஆளுகின்ற மாநிலத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவது, நெருக்கடிகளை ஏற்படுத்துவது என்கின்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். எனவே எத்தனை உச்ச நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும், கண்டித்தாலும் அதை அவர் பொருட்படுத்தமாட்டார்.

பாஜக வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் உள்ளது. காங்கிரசும், ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நின்று வாக்குகளை சிதறடித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற அனைத்து தார்மீக பொறுப்பு உள்ளது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் பாஜக உடைய தில்லுமுல்லு அரசியலை முறியடிக்க முடியும்.

வழக்கத்திற்கு மாறாக டெல்லியில் பாஜகவினர் வாக்குகளுக்கு பணம்
கொடுத்திருக்கிறார்கள். பொருள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். எப்படியாவது தலைநகர் டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக
இருந்தது. அதை அவர்கள் சாதித்து காட்டியுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ள தோல்வியாகும்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கும், திமுகவுக்கும் இடையே முரண்பாடான கருத்துக்கள் இருக்கிறதே என்ற கேள்விக்கு, பிரச்சனைகளின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்புதான். அதை கூட்டணிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய முரண்பாடாக பார்க்க கூடாது. இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும் சரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும் சரி இந்தக் கூட்டணியின் தேவை என்ன என்பதை உணர்ந்திருக்கின்றோம்.

தேவை என்பதினால் பிரச்சனைகளின் அடிப்படையில் பேசாமல் இருக்க முடியாது.
பிரச்சனைகளின் அடிப்படையில் நாங்கள் அரசுக்கு சிலவற்றை சுட்டிக்காட்டுவோம் அல்லது கண்டிக்கின்றோம் என்றால் அது கூட்டணிக்கு பாதகத்தை உருவாக்காது. கூட்டணி நிலைப்பாடு என்பது வேறு. பிரச்சனைகளின் அடிப்படையில் அரசு உடன் முரண்பாடு என்பது வேறு. இரண்டையும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகளோ, விடுதலை சிறுத்தைகளோ, திராவிட கட்சிகளின் கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு 100 விழுக்காடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
பீகார், ஆந்திரப் பிரதேஷ் 2 மாநிலம் மட்டும் மையமாக வைத்து கடந்த
பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியை
தக்க வைப்பதில் கூட்டணிக்கு துணையாக இருக்கக்கூடிய சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரை தக்க வைப்பதில் மத்திய அரசு மிக கவனமாக இருக்கிறது.

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு உள்பட, மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. திட்டமிட்டு அலட்சியப்படுத்துகிறது, புறக்கணிக்கிறது. அதைத்தான் தமிழக முதல்வர் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று வரத்துடன் தெரிவித்தார்”. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Tags :
Advertisement