For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர் #RajnathSingh - முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்!

06:35 PM Aug 18, 2024 IST | Web Editor
சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர்  rajnathsingh   முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா  கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்
Advertisement

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா , கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில்,  கலைஞர் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் இன்று மாலை  மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளாா். இந்த விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

Imageஇந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகல் சென்னை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags :
Advertisement