For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு - மத்திய அரசு!

04:40 PM Aug 17, 2024 IST | Web Editor
 kolkata பெண் மருத்துவர் கொலை   மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு   மத்திய அரசு
Advertisement

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் -17ம் தேதி ) காலை 6 மணி முதல் நாளை (ஆகஸ்ட் -18ம் தேதி ) காலை 6 மணி வரை ஒருநாள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதுமே அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

இந்நிலையில் மருத்துவர் சங்க கூட்டமைப்பு, இந்திய மருத்துவ சங்கம், டெல்லி அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியதன்படி, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு பரிந்துரைக்கும் என்றும் மாநில அரசுகள் தங்கள் பரிந்துரைகளை குழுவுக்கு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement