For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன், மருமகன் உயிரிழப்பு!

10:05 PM Apr 01, 2024 IST | Web Editor
நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன்  மருமகன் உயிரிழப்பு
Advertisement

உசிலம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி மாமன்
மற்றும் மருமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற
பாண்டி. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். பிரேம்குமார் விடுமுறைக்காக தனது மாமன் ஆனந்த என்ற பாண்டி ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது பிரேம்  நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமானுத்து கிராமத்தில் உள்ள அன்னக்கொடி என்பவரது தோட்டத்தை
பாண்டியின் தந்தை கணேசன் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாண்டி, மருமகன் பிரேம்குமாருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது. கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும்
போலீசார் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடி உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இருவர் உயிரிழந்தது தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement