For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள் - ஆத்திரத்தில் எம்எல்ஏ-விடம் சீறிய பொதுமக்கள்!

ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் எம்எல்ஏ-வை சீறி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:54 PM Jun 13, 2025 IST | Web Editor
ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் எம்எல்ஏ-வை சீறி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள்   ஆத்திரத்தில் எம்எல்ஏ விடம் சீறிய பொதுமக்கள்
Advertisement

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் மலை பெய்து வரும் நிலையில், ஹைதராபாத்தின் ஒரு பகுதியாக இருக்கும் யாகுத்புரா தொகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஜாபர் ஹுசைனிடம் நேரடியாக பலமுறை புகார் அளித்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து அந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.  இந்த நிலையில் மழை நிலவரம் ஆய்வு என்ற பெயரில் மழைநீர் தேங்கி இருக்கும் ஒரு பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ ஜாபர் ஹூசேன் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் சமயத்தில் இது போன்ற இடர்பாடுகளை சந்திக்கிறோம் என்று பலமுறை உங்களிடம் நேரில் புகார் அளித்தோம். ஆனால், நீங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இப்போது ஆய்வு என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்திருக்கிறீர்கள் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜாபர் ஹூசேனை தள்ளிவிட்டு சீறி தாக்க முயன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags :
Advertisement