For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாம்பரம் அருகே இருவர் வெட்டி கொலை - போலீசார் விசாரணை!

10:53 AM Jul 02, 2024 IST | Web Editor
தாம்பரம் அருகே இருவர் வெட்டி கொலை   போலீசார் விசாரணை
Advertisement

தாம்பரம் அருகே பெருங்களத்தூர் குண்டுமேடு சுடுகாட்டில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் குண்டு மேடு பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு, இரவு 11 மணியளவில் ஹரிகரன் என்பவரின் ஆட்டோவில் 5 பேர் குடிப்பதற்காக சென்றனர்.  ஆட்டோ ஓட்டுநர் வெளியில் காத்திருக்க, மற்ற 5 பேர் சுடுகாட்டிற்குள் சென்றனர்.

இந்த நிலையில் இரண்டு மணி நேரம் கடந்த போதிலும், சுடுகாட்டிற்குள் சென்ற யாரும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சுடுகாட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார்.  அங்கு ஆட்டோவில் சென்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.   இதனை பார்த்த ஹரிகரன் உடனடியாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சென்று நடந்தவற்றை கூறினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மது அருந்திய 5 நபர்களும், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும், இதனால் அவர்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சூழலில் மது அருந்திய போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆரிப், சோனு மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகிய மூவரும் சேர்ந்து உடன் வந்த ஜில்லா என்கிற தமிழரசன்,  அண்ணாமலை ஆகிய இரண்டு இளைஞர்களையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  இந்த சுடுகாட்டில் இதுபோன்று பல கொலை சம்பவம் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement