For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி கொலை - போலீசார் விசாரணை!

09:44 AM Jun 07, 2024 IST | Web Editor
கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி கொலை   போலீசார் விசாரணை
Advertisement

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது
மகன் வெள்ளத்துரை (50).   இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில்
மீன்கடை நடத்தி வந்தார்.  இவர் இரவில் வழக்கமாக மீன் கடையிலேயே
தூங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.  அந்த வகையில் வெள்ளத்துரை நேற்று இரவு வழக்கம் போல கடையில் தூங்கியுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் கடைக்கு வந்த சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.  இதில் சாமி
என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உயிருக்கு போராடிக்
கொண்டிருந்த வெள்ளத்துரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன்,  கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில்
பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  மேலும் மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததுடன்,  தடயவில் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement