For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழையால் போக்குவரத்து தடை - அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!

12:30 PM Dec 05, 2023 IST | Web Editor
கனமழையால் போக்குவரத்து தடை   அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு
Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால்,  அத்தியாவசிய பொருட்களான பால்,  காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை  கடக்கிறது.  ஏற்கனவே சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது.  அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு 230 கிமீ தொலைவில் வடதிசை நோக்கி  நகர்வதாக அறிவிக்கப்பட்டது.  தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 80 கி மீ வடக்கு வட கிழக்கே நிலை கொண்டுள்ளது.  இது இன்று  ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே,  பாபட்லாவிற்கு அருகே,  கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த கனமழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால்,  அத்யாவசிய பொருட்களான பால்,  காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  போக்குவரத்து தடை,  மின் தடை உள்ளிட்ட காரணங்களால்  அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  கோயம்பேட்டில் 2000 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement