For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழை எதிரொலி - நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

07:59 PM Dec 01, 2024 IST | Web Editor
கனமழை எதிரொலி   நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்து, வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியனர் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

இந்நிலையில், திருப்பத்தூர், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை (டிச.2) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement