For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாமல்லபுரத்தில் காவலாளி மீது கொடூர தாக்குதல் | 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது!

02:05 PM Oct 22, 2024 IST | Web Editor
மாமல்லபுரத்தில் காவலாளி மீது கொடூர தாக்குதல்   2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
Advertisement

மாமல்லபுரத்தில் நோ என்ட்ரியில் வந்த காரை தடுத்த, காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து
செல்கின்றனர். நேற்று மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில், 2 பெண்கள் உள்பட 4 பேர் இருந்த கார் ஒன்று நோ பார்க்கிங் வழியாக சென்று அங்கு காரை
பார்க் செய்ய முயன்றது. அந்த காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது என்றும், ஐந்துரதம் வணிக வளாக வாகன நிறுத்துமிட காவலாளி ஏழுமலை (வயது49) என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார்.

அப்போது அவரை இடிப்பது போன்று, அவரின் சொல்லை மீறி அந்த கார் நோ எனட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை பார்த்து ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே டிப்-டாப் உடை அணிந்திருந்த 2 பெண்களும், “ஏய் யாரை பார்த்து பொறம்போக்கு என்கிறாய்” என ஆவேசமடைந்து, காரைவிட்டு திபுதிபுவென கீழே இறங்கினர். தொடர்ந்து நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த 2 ஆண்களும் சேர்ந்து நடுரோட்டில் காவலாளி ஏழுமலையை கடுமையாக தாக்கினர்.

பதிலுக்கு அவர் தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் கீழே தள்ளி கும்மாங்குத்து குத்தி, அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் அவர் (பணியாளர் ஏழுமலை) வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அதனால் அவரை தாக்கி, அவரது சட்டையை கிழித்தனர். மற்றொரு பெண் ஸ்டண்ட் மாஸ்டர் போல் காலால் எட்டி உதைத்து தாக்கினார். அடி-உதையில் அவர் வலியில் கதறினார். இந்த கைக்கலப்பு சம்பவத்தால் அந்த ஏரியாவே பரபரப்பானது. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காவலரை தாக்கிய 4 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகில் தலைமறைவாக இருந்த பிரபு தாஸ் (41), சண்முக பிரியா (38), கீர்த்தனா (29) ஆகிய மூன்று பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement